Wednesday 9 October 2013

வஜனாம்ருதம்

அஸதோ மா ஸதகமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருத்யோர் மா அம்ருதம்கமய ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.


25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------வஜனாம்ருதம்

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

1. உனது வாழ்வில் நிரந்தரமான சுகத்துடன் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற விஷயத்தில் என்னனவும் சந்தேகப்படாதே. கருகிய கரி நெருப்புடன் சம்பந்தப் படும் பொழுது அதன் இயற்கையான கருமை மாறி ஒளிர்கின்றது. அதே போன்று உனது மனம் தெய்வீக ஒலியில் கலந்திருந்தால் ஜீவசுகம் நிறைந்த சம்பூரண மனிதனை உன்னில் காணலாம்.

 2. கறல் ஏறிய இரும்பைக் காந்தம் ஈர்க்காதது போன்று அழுக்கு நிறைந்த மனதைத் தெய்வீக ஒளி கவர்ந்தெடுப்பதில்ல.

3. உனது இதயத்தை தூய்மைப் படுத்துக. அப்பொழுது சிந்தனா சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதமான ரீதியில் பெருகும்.

4. நீ தெய்வத்தைப் பார்க்கவில்லையென்றாலும் தெய்வம் உன்னைப் பார்க்கிறது.

5. கண்கள் உலகத்தைப் பார்க்கும்  சக்தியை இழந்தாலும், தெய்வத்தைப் பார்க்கும் சக்தியை இழப்பதில்லை.

6.உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும்கூட பேராற்றலும் பேரறிவும் மறைந்திருக்கிறது. அதை உணரக்கூடிய அளவிற்கு இதயத்தைப் புனிதப்படுத்துக.

7.தார்மீக வழியில் தேடிய பணம் அவ்வழியில் செலவழித்தால் பாபங்கள் தேய்ந்துவிடும்.

8.உன் மனக்குற்றம் மற்றவர்களின் குற்றமாகத் தோற்றமளிக்கிறது.

9. அழுக்காறு நீங்கியபின் செய்யுந் தொண்டுதான் தொண்டு.

10. குறுகிய மனமுடையவனின் பக்தி நஞ்சு கலந்த அமிர்தம் போன்றது.

11.தன்னைத்தான் அளந்து பார்க்கத் தெரியாதவன் மற்றவர்களை அளந்து பார்ப்பது எங்ஙனம்?

12.உலோபியின் செல்வம் பாம்புப் புற்றிலிருக்குந் தேன் போன்றது.

13. நல்லதாயினும் அது நல்லோர்களிடத்திளிருந்து வரவேண்டும். 

14. கர்ம ரகசியம் தெரிதவனுக்கு  வாழ்க்கை விளையாட்டரங்கம் போன்றது. 

15. சேர்ந்து வாழ்ந்தாலும் நீரிற் கலந்த என்னேய்யைப்போல் வாழ்.

16. உன்னை உன்வசப்படுத்தினால், மற்றவர்கள் உன் வசப்படுவார்கள்.

17. உண்மை இருக்கும் இடத்தில் அழகும், இளமையும் பொழியும்.

18. அடிமைகள் வாழ்ந்தாலும், நலன் பெறுவதற்கு ஒன்றுமேயில்லை.

19. மரணபயம் இருக்கின்றவன் விடுதலையின் உயர்ந்த சுகத்தை அறிவதில்லை.

 20. அரிய சந்தர்ப்பங்கள் பலதும் உன் எதிரில் நிற்கின்றன. குழைத்து ஊட்டும்போது உண்ண மறுக்கும் குழந்தையைப்போல், சந்தர்ப்பத்தை உணர்ந்து செயற்படுத்தத் தெரியாதவர்கள்,துன்பத்திலிருந்து மீளுவதில்லை.

 21. காலத்தைப் பிரயோசனப்படுத்தத் தெரியாதவர்களுக்குக் காலமும், காலனும் ஒன்றே.

22. உபயோகமுறை தெரிந்தால் நஞ்சும் அமுதமாகும்.

23. உரிமை இல்லாத இடத்தில் உரித்துடன் பேசி விரோதிகளைத் தேடாதே.

24. மனிதா! உனது மெய்யன்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில், இவ்வுலகம் இல்லை. அதை உணர்ந்து அன்புடன் அரவணைக்கும் இறைவனிடம் அன்பு செலுத்தினால், வஞ்சனை இல்லாத பேரன்பில் முழ்கி வாழலாம்.

25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

No comments: