Monday 23 September 2013

Enru thaniyum intha suthanthira thaakam




என்று தணியும் இந்த சுதந்திர தாகம் 
என்று முடியும் எங்கள் அவலத்தின் ஓலம் 
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் 
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ 
பாரினில் இன்னல்கள் வேறினியார்க்கோ 
தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ 
தாயுந்தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ 

அன்றுநம் மண்ணில்நாம் ஆயிரம் மடிந்தோம் 
இன்றுநம் மண்ணில்நாம் போராடிட வாழ்ந்தோம் 
என்றுநம் கனவுகள் வென்றெடுப்போமோ
நம்மை நாம் ஆண்டிடும் நாளும்வாராதோ.







தமிழ் ஆழிக் கரையினிலே
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன்

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான்.



No comments: