Friday 24 January 2014

தன்னை அறிந்தால் தவம்வே றில்லை




தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே

பொன்னை யன்றி பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லை
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியையும் இல்லைச்  சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே

நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை
சொன்ன சுருதியின் துணிபிது வாமே

காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம்




எனது மகனுக்கு பதினாறு வயதாகப் போகிறது. கடந்த பதினைந்து வருடங்களாக மனைவி   இருந்தபோதும், இறந்தபின்னும் எந்தவிதமான இடையூறுமின்றி விம்பிள்டன் பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போய்வருகிறோம். சகோதரர்களின் பிள்ளைகளுக்கு பிள்ளை பிறந்தாலோ தீட்டு,துடக்கு, என்று வந்தாலோ மட்டுமே தடைப்படும்.
இன்று ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பித்து பாலஸ்தாபனம் பண்ணிய கோவிலில் யோக சுவாமிகளின் 'நற்சிந்தனை' புத்தகம் கிடைத்தது. அதிலொரு பாடல் 'சின்னத்தங்கம்' என்று முடிவுறும். அதனை எங்கள் சுவாமிஜி அவர்களின் வரிகளாக பாவித்து எங்கள் சகோதரியாரை அவர் அழைக்கும் 'சின்னத்தங்கச்சி' என்று மாற்றி எழுதிப் பார்த்தேன். எனது அக்காவின் அருளுரைகளும் இதுபோலவே அமைத்திருக்கும்.
அவருக்கு சமர்ப்பணமாக "சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம்" என்ற தலைப்பில் அமைத்துள்ளேன்.


"சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம் "

தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனளைந்தாய் - சின்னத்தங்கச்சி
வாட்டமெல்லாம் விட்டிடடி சின்னத்தங்கச்சி

ஆழித் துரும்பெனவே யன்குமிங்கு மாயலைந்து
பாரில் தவியாதே - சின்னத்தங்கச்சி
பார்த்து மகிழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

கங்குபகல் காணாத கருணைதனை வேண்டிக்கொண்டு
செங்கமல மடமாதே - சின்னத்தங்கச்சி
சீராக வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு
கேடரியாத் திருவடியை - சின்னத்தங்கச்சி
கிட்டநீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே
தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ் - சின்னத்தங்கச்சி
சீவன்சிவன் ஆச்சுதடி - சின்னத்தங்கச்சி

தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும்
அழுதழுது ஆண்டவனைச் - சின்னத்தங்கச்சி
ஆன்மலாபம் தேடிடடி - சின்னத்தங்கச்சி

முழுதுமுண்மை என்றுமுன்னாள் மோனகுரு சொன்னாரடி
பழுதொன்று மில்லையடி - சின்னத்தங்கச்சி
பவுத்திரமாய் வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய் - சின்னத்தங்கச்சி
மரணபய மில்லையடி - சின்னத்தங்கச்சி

சேண்பொழியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு
வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கச்சி
வேண்டிப் பணிந்திடுவாய் சின்னத்தங்கச்சி

மானாபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல்
தானான தன்னிலையில் - சின்னத்தங்கச்சி
தனியே யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

தானான தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை
மோன நிலைதனிலே - சின்னத்தங்கச்சி
மூழ்கி யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

புத்தியைநீ நாட்டாதே புன்நெறியைச் சூட்டாதே
வெற்றியுனக் குண்டாகுஞ் - சின்னத்தங்கச்சி
விருப்பும் வெறுப்பும்விடு - சின்னத்தங்கச்சி

எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து
பத்திசெய்து பார்த்திடுவாய் - சின்னத்தங்கச்சி
பழிபாவ மில்லையடி - சின்னத்தங்கச்சி

தத்துவப் பேயோடு தான்தழுவிக் கொள்ளாதே
சுத்தபரி பூரணத்தில் - சின்னத்தங்கச்சி
சுகித்துநீ வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

வித்தகம்நீ பேசாதே வேறொன்றை நாடாதே
செத்தாரைப் போல்திரிவாய் - சின்னத்தங்கச்சி
தெய்வம்நீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ் - சின்னத்தங்கச்சி
தானொன்றாய்ப் போகுமடி - சின்னத்தங்கச்சி

Thursday 23 January 2014

கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு



தவம்

ஆதி மனிதர்கள் அவனை வானில் முளைத்த நெருப்பு என்று கணந்தோறும் பயந்தார்கள்.யுகங்கள் கழிய பயங்கள் வியப்பாகின்றன. கிரேக்கர்கள் அவனை அப்போலோ என்றழைக்கத் துவங்கினர். அவனுக்கென கையில் யாழொன்றையும் கண்டனர். வைத்தியனாதலால் சூர்யவெளிச்சம் என்ற நாளாந்த அனுமானத்தை வாழ்விற்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஒளியும் ஒளி இழைகளின் இடுக்கில் வசிக்கும் இருளும் அவனது கலை. அவனது கலையும் வைத்தியமும் சங்கமிக்கும்போது அவன் பேருணர்வுகளின் உதரமாகிறான்.

ஆனால் நான் எழுதமுயர்சிக்கும்போது மட்டும் அவன் குகையாகிறான். எனது சித்தாந்தங்கள் வேட்டை நாய்களாக அவனைத் தேடுகின்றன. அவற்றின் குரல்கள் மனசின் கானக மரங்களில் மோதி எதிரோளிகலாகச் சிதறுகின்றன. "டேஃப்னே, டேஃனே"என அப்போலோ தான் காதலித்தவளைப் பின் தொடரும் குரல் எனது சித்தாந்தங்களின் குரைப்பில் கேட்கிறது. டேஃனேயை அவனால் தீண்ட முடியவில்லை. மரமாகிவிட்டாள். அவள் கன்னிமையின் நிழலில் நான் நிற்கிறேன். அதன் இலைகளை ஒடித்து அப்போலோவைப் போலவே சிரசில் அணிந்து கொள்கிறேன். எழுத வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. உள்ளிருந்து ஒரு புதிய இயல்பு பிறக்கிறது.என் விரல்களை மடித்து கைகளையும் கட்டிக்கொள்கிறேன். வேட்டை நாய்கள் முயல்களையும் முள்ளம்பன்றிகளையும் தேடி ஓடட்டும். எனது பிடரியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது. மூச்சின் இறகுகள் நுரைஈரலிறக்கைகளுள் மடிகின்றன.

சூர்யன் தன் உத்தரக்கோதுக்குள் ஆழ்ந்து கருவாகிறான். எல்லையற்று ஒடுங்கிக்கொண்டிருக்கிறான்.

தவம்   1 23/01/2014


அறைகூவல் 2

இது
புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.
நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என்குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர் வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.
தோலும் தசையும்
ஓடத்தெரியாத
உதிரமும் மரமாய்
நாடு மனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விற்குப் போர்வீரா!
தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து)எரியும்
சோதிஒன்று வருகிறது.
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்
நீ
ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன்
மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல்
நீறாகு!

24/01/2014

குருஷேத்ரம்    3

இன்று வேலை நிறுத்தம்!
'கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே'
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கன்னபிரானுக்குக்
கல்லடி
சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்.
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்தவீர் யார்ச்சுதனாய்
தலை ஆயிரம்,
கை இரண்டாயிரம்.
கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்.
விஸ்வரூபத்துக்கும்
முயற்சிக்க வலுவில்லை.
இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
'கீதையைக் கேட்க
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடு கௌரவரை' என்றான்.
பறந்தது போன் செய்தி
பொலீசுக்கு.


(உன் ) பெயர்    4

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
'அப்பாடா' என்று
அண்ணாந்தேன்.......

சந்திர கோலத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

25/01/2014


கலப்பு    5

ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....



வசன கவிதை    சுவர்கள்    6

மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.

இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது.

வீடு திரும்பும் வழி தெரியவில்லை.

அன்று.....
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கி திறந்த பாலைவெளியினூடே
ஒரு நக்ஷத்திர அழுகையில் அழைத்து வழி காட்டிற்று.

நான் சக்கரவர்த்தியுமல்லன்.

சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல.....

பாலையாயினும்
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாஸமான பசியைப் போன்று நிற்கக் கண்டவனாயினும்

வீடு

ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.

இந்த சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.

கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண.

(லக்ஷிமிக்கு)

29/01/2014


முதுமை 7 

காலம் பனித்து விழுந்து 
கண்களை மறைக்கிறது.
கபாலத்தின் கூரையுள் 
ஒட்டியிருந்து 
எண்ணவலை பின்னிப்பின்னி 
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில் 
புலனின் வாடைக்காற்று 
வாரியிறைத்த பழந்தூசு.

உலகை நோக்கிய
என்விழி வியப்புகள்
உயிரின் இவ்வந்திப்போதில்
திரைகள் தொடர்ந்துவரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்.
அந்தியை நோக்குகிறேன்.
ஏதோ எரிகிறது.....
ஒன்றுமில்லை,
பரிதிப் பிணம்.

பூர்ஷுவா 8

வம்பளப்பு,கண்ணடிப்பு,
கண்ணாடியில்
டீயை எதிர்பார்த்திருக்கும்
பிரதி பிம்பங்கள்.
சீனத்துக் கோப்பைகளில்
வெள்ளையன் கரண்டிகள்
சிந்திய சிரிப்புகள்.
எங்கள் முறுவலிப்பு
முறைக்கும்.
தேசம் திருகி
வலம் இடமாகும்.
காலமும் திருகி
நேற்றையது நாளையாய்
நாளை நேற்றாகும்.
யாவும் உருகி
நீராகும்.

அனால் நாமோ
முறுவல் என்று
முறைப்போம்.
யாவற்றையும் கண்டு
கண்ணாடியில்
நிச்சலனமாய்க் காத்திருக்கும்
பிரளயம்.



30/01/2014



பேச்சு  1       9 

கேள்,
அழகு கதைக்கிறது.
ரத்தப் பளபளப்பு.
கண்ணின் இமைக்கரங்கள் 
மெல்ல அருகளைக்கும்.
பார்வைச் செவிப்பறையில் 
பருவம் முரசறையும்.
பூவின் இதழ்ச் சுவருள் 
வண்டுக் குரல் ஒலிகள் 
மோதி மடிகிறது.
முத்தத் திரைமறைவில் 
பேச்சுப் புதைகிறது.
ஆனால்,
ரத்தம் கதைக்கிறது.
மௌனம் அதிர்கிறது.

(நன்றி: 'எழுத்து')


பேச்சு   2      1௦ 

கருத்தழிவின் கழிவு 
காதலன் பிதற்றல்.
அவள் சொல்லோ 
வெறும் பார்வை.
வெறும் விரல்கள் 
மணலில் 
விட்ட வடுக்கள்.

(நன்றி: 'நடை')


விடிவு     11 

பூமித் தோலில் 
அழகுத் தேமல்.

பரிதி புணர்ந்து 
படரும் விந்து.

இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி.

வெளிச்சச் சிறகில்,
மிதக்கும் குருவி.

(நன்றி: 'எழுத்து')


31/01/2014.



அடிமனம்     12 


முட்டித் ததும்பியென்ன?
மாலையில் பகல் வடிகிறது.
ஒளி ஒதுங்கிய இரவாகிறது.
கதிர் 
எங்கோ சொட்டி 
விளைந்தன தாரகைகள்,
பகலின் துளிகள்.
என் மன அகலிகையின் 
நிறைவின்மை முடிவுற்று 
வாழ்வு கரவாகிறது.
இனி என்ன?
கௌதம உக்கிரத்திற்கு 
ஒரு போலி.
போலிப் பரிதி.
ஒரு போலி வைகறை.
உதிக்கிறது எங்கும் ஒரு 
திருட்டுத் தெளிவு.
இந்திர நிலவு.
பாதி தெளிந்து 
ஆடை கலைந்து 
வெளிர்கிறது மனவெளி.
ஒலியற்றுச் சிரித்து 
மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு தனித்து 
வெறிச் சோடிய தெருவெங்கும் 
அழுகி வடியும் விளக்கின் 
வாழ்த்தொளி.
இது நிகழ்ந்த சமயம் 
இடமற்ற 
மனோவேளை.

(நன்றி: 'கசடதபற')


வசன கவிதை    வருகை     13 

இரு துவங்களிலுமிருந்து சுவர்கள் முளைத்து அறையாகின்றன.

சூர்யக் கூரையிலிருந்து தொங்கும் ஒரு ஆகர்ஷணத் தூணியுள், அறைவாசி காமம் மேலிட்டுத் தவிக்கிறான்.

நக்ஷத்ரன்களினூடே, இன்னொரு மானுஷ்யத்தைத் தேடி அலைகிறது அவளது காம வாடை.

பிரபஞ்சம், நுகரும் புலன்களற்று, வெற்றுப் பார்வை பார்த்து. விடாயைக் கூட்டுகிறது.

ஒளிமண்டலங்களிடையே பிளக்கும் அகாதம் தூளியில் தவிப்பவளை நோக்கி வந்து புகுந்தபடியே இருக்கிறது; முடிவற்று விடாய்தீர்கிறது. உணராது அவள் தவிக்கிறாள்.

ஃ 

01/02/2014


அற்புதம்      14 

துருப்பிடித்த 
இரும்புக் கொடுகளினூடே 
சிதறும் 
பயனற்ற 
உப்பு நீர்ப் பாறைகள்.
வரண்ட நதிபோல் கிடக்கும் 
ஒரு துறைமுகத் தெரு 
எங்கும் 
இரும்பின் கோஷம்,
முரட்டு இயக்கம்.
ஒரு தொழிலாளி 
சூரியனை அவனது சிரசு மறைக்க 
பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து 
பீடிப் புகையோடு 
காறித் துப்புகிறான்.
அற்புதம்.
விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க,
பரிதியின் விரித்த கையிலிருந்து 
ஒரு மழைத்துளி பிறக்கிறான்.
முகத்தில் 
வைரத்தின் தீவிரம்.அவள் 
மூளையில் ஒரு வான வில்.
எச்சல் துளி 
என் விழிப்பந்தில் வீழ்கிறது.
அக்கணம், ஒரு கணம் 
கிரேன்கள் லாரிகள் யாவும் 
தொழிலற்றுச் சமைந்தன.


வசன கவிதை      தவிப்பு      15 

தவிப்பு, நம்பிக்கையின் இனிய துகள்களாய் சிதறி விழுகிறது.
மனிதச் சிறுவர்கள், இரவினூடே யாவற்றையும் தேடிப்பிடித்தாராய்ந்து விளையாடுகின்றனர்.

எல்லையின்மை தவித்துத் தவித்து, சிதறியபடி ஆராய்வுக்ககப்படாது விரிந்தகல்கிறது.
இந்த இரவுகளில் சிறுவர்களின் ஆய்வுக்கருவிகள்தான் விழித்திருக்கின்றன.

ஆய்வுக் கூடங்களில் எல்லையின்மையை செயற்கை கருப்பைகளில் சிறையிடுகின்றனர்.

கருவையும் நிர்மாணிக்கின்றனர். காத்திருக்கின்றனர்.

கருப்பை வெடிக்கிறது.
அழிவு.

சரித்திரம், காலம், மனிதச்சிறுவனின் நம்பிக்கைகள்.......இனியதுகள்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன.

ஃ 
02/02/2014




Wednesday 22 January 2014

மனக் கட்டுப்பாடு தியானத்திற்கு ...ஜே.கி.

நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக... என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய...?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.



இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப் பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே ‘உண்மை’யை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு ‘சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம், அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். ‘மனசை’ பாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அது எதனால் ஆனது.? - பலவிதமான எண்ணங்களால் ஆனது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறு, இப்படி-இல்லை அப்படி, வரும்-வராது, இதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதை, யாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல...நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்... அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!

இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை ‘மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடு போன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம் ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள் மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவது கட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகை பழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்கு அடிமை.

மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக...மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போது என்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில், அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் - மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன 'இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான' என்றால் ‘இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த 'காலிசெய்தலின்போது வரும்'. அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.

அது சாக்கடை என்று நாம் ‘அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்ல, குரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்கங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்கங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்கங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்கங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான். அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது...அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்' என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்' என்றே அழைக்கிறோம்.

அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?
பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கி...
நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக... என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய...?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.



இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப் பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே ‘உண்மை’யை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு ‘சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம், அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். ‘மனசை’ பாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அது எதனால் ஆனது.? - பலவிதமான எண்ணங்களால் ஆனது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறு, இப்படி-இல்லை அப்படி, வரும்-வராது, இதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதை, யாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல...நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்... அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!

இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை ‘மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடு போன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம் ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள் மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவது கட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகை பழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்கு அடிமை.

மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக...மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போது என்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில், அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் - மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன 'இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான' என்றால் ‘இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த 'காலிசெய்தலின்போது வரும்'. அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.

அது சாக்கடை என்று நாம் ‘அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்ல, குரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்கங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்கங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்கங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்கங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான். அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது...அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்' என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்' என்றே அழைக்கிறோம்.

அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?
பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கி... நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக... என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய...?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.



இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப் பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே ‘உண்மை’யை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு ‘சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம், அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். ‘மனசை’ பாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அது எதனால் ஆனது.? - பலவிதமான எண்ணங்களால் ஆனது.

அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறு, இப்படி-இல்லை அப்படி, வரும்-வராது, இதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதை, யாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல...நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்... அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!

இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை ‘மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடு போன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம் ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள் மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவது கட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகை பழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்கு அடிமை.

மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக...மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போது என்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில், அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் - மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன 'இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான' என்றால் ‘இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த 'காலிசெய்தலின்போது வரும்'. அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.

அது சாக்கடை என்று நாம் ‘அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்ல, குரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்கங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்கங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்கங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்கங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான். அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது...அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.

இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்' என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்' என்றே அழைக்கிறோம்.

அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?
பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கி...

ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை ...ஜே.கி.




இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

மற்றபடி பழைய கள் புதிய மொந்தையில்தான். நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்ததம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது.

நீங்கள் உங்கள் மனதை பிரித்துப் பார்த்து அதன் மூலம் பழையவைகளை அறியலாம்.அதற்கு இனி வருகிற எண்ணங்களே உதவும். ஏனெனில் அவைகள் பழையவைகளின் சாயலிலேயே வரும்.



  
ஒரு ராஜா கச்சேரிக்குப் போனார். மிகப் பிரபலமான நல்ல வித்வானின் கச்சேரி. நல்ல கூட்டம். எல்லாரும் தலையை ஆட்டி ஆட்டி, தொடையில் தட்டி, சபாஷ் போட்டு கேட்டார்கள். கச்சேரி முடியப் போகும் தருவாயில் ராஜா ஒருத்தனை கூப்பிட்டு இவ்வளவு நேரம் பாடியும் கொஞ்சம் கூட களைப்படையாமல் அவர் இருக்காரு. நான் அப்பவேயிருந்து கவனிச்சேன். அவரு ஏதோ அடிக்கடி எடுத்து வாயில போட்டுக்கறாரே அது என்னன்னு கேட்டு நமக்கும் வாங்கி வை என்றார்.

ராஜாவின் மனநிலை உணவில் இருந்தது .அதைத்தான் கவனித்திருக்கிறார். நாமும் அப்படித்தான். நம் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே வருகிற எண்ணங்கள் நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன.அதே தடத்தில் புதிதாக (!) வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா? .

ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன் என்றால்உங்கள் ஆழ்மனதை உங்களால் நேரடியாக அறியவே முடியாது. மறைமுகமாகவே அறியமுடியும்.

மறுபடியும் படியுங்கள்.

ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே ‘புதிதாக (!) வருகிற எண்ணங்கள்’ நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன அதே தடத்தில் வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை (ஏற்கனவே இருக்கிற எண்ணங்களின் தொகுப்பை) புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா?

சேகரிப்பவன் கவனமாக, ‘தேர்ந்து எடுக்காத தன்மையோடு' கூர்மையாக, வந்துகொண்டிருக்கிற எண்ணங்களை கவனிக்கும்போது நீங்கள் அறிந்த உங்கள் மேல் மனம், நீங்கள் அறியாத உங்கள் ஆழ்மனம் - அதன் அடுக்குகள் எல்லாம் விடுபட்டு வெளிவர ஆரம்பிக்கின்றன்.

எண்ணங்கள் எண்ணங்களே. அவை மேல்மன எண்ணங்களாக இருந்தால் என்ன? ஆழ்மன எண்ணங்களாக இருந்தால் என்ன?

ஜியாக்ரபிக் சானலில் ஒரு ஆவணப்படம். காட்டு எறும்புகளைப் பற்றியது. லட்சக் கணக்கில் ஊர்ந்து செல்லுகிறது. தடத்திலேயே. திடீரென்று கடும் மழை. காட்டாறு உருவாகி பெருக்கெடுத்து ஓட, இந்த எறும்புகள் சட்டென்று ஒன்றை ஒன்றை ஈர்த்துக் கொள்ள ஒரு எறும்புப் பந்து உருவாகிவிட, அந்த பந்து தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது. எண்ணங்கள் ஆழ்மனதில் இப்படித்தான் கட்டி தட்டிப் போய் இறுகிப் போய் இருக்கின்றன. அப்படி இருப்பதனால் அதை மனம் (ஆழ்'மனம்') என்கிறோம்.

தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது ‘தேர்ந்து எடுப்பதில்லை’. ஆகவே ஆழ்மனம் விடுபட்டு (எதனிடமிருந்து என்றால் தன் கட்டுகளிலிருந்தே விடுபட்டு) கனவுகளாக வருகின்றன.

கனவுகளில் லாஜிக் இருந்ததே கிடையாது. அது அப்படித்தான். ஆழ்மனதில் லாஜிக் என்பதே கிடையாது. வெறும் எண்ணங்களே. அங்கே சமூக கட்டுப்பாடுகளே கிடையாது. தனிமனிதனாக நீங்கள் உங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்த மாதிரி...அவை எட்டுதிசைகளிலும் ஒடுகிறமாதிரி இயங்கும்...நீங்கள் தேர்ந்து எடுக்கும் போது ஆழ்மனம் அடைபட்டுவிடுகிறது.

அப்படியானால் கனவின்போது தியானம் நடக்கிறதா என்று கேட்டால் அப்போது ‘கவனிப்பு (பிரக்ஞை)’ இல்லை. தியானத்திற்கு ‘தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். எண்ணங்களை கூர்ந்து கவனிக்கிற தன்மையும் வேண்டுமே! (Choiceless Awareness).

Choiceless – தேர்ந்து எடுக்காத தன்மை

Awareness – கவனித்தல் குறிக்கோள் இல்லாமல்.(பிரக்ஞை)

இந்த சுத்திகரிக்கப் பட்ட மனம் தேவையாய் இருக்கிறது தியானத்திற்கு. காலியான மனம் தேவை.

எனக்கு காலியான மனம் தேவை என்று பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் போச்சு. அது தப்பாட்டம். ஏனெனில் ஒரு குறிக்கோளுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆழ்மனம் விடுபட இயலாது. இது சரி, இது தவறு, இது அப்படி, இது இப்படி,இது வேண்டும்,இது வேண்டாம் என்று ஆரம்பிக்கிற மனம் -பிரித்துப் பார்க்கிற மனம்- அதையே பிடிப்பாகக் கொண்டுவிட Self reveleation நடப்பதில்லை. விடுபடுதல் நடக்காது.

மனதின் மேல் மட்டத்திலும் மட்டுமல்ல ஆழ்மனதிலும் தேர்ந்து எடுக்காமை நடக்க வேண்டும். மேல் மனம் கரைய கரைய ஆழ்மனமும் விடுபடுகிறது. அப்போது மேல் மனம் ஆழ்மனம் என்ற பாகுபாடே தேவைப்படாது. அது நம் தகவல் தொடர்புக்காக நாம் பிரித்து வைத்துக் கொண்டது. கட்டி தட்டிப் போனது ஆழ்மனம், அலைந்து கொண்டே இருப்பது மேல்மனம் என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டோம். (ஆழ்மனமே மேல் மனதின் அலைச்சலுக்கு ஒரு காரணம் என்றாலும்)

இப்படியான எண்ணங்களை கவனித்தல் நடக்கும்போது நாம்கடந்தகாலத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறோம். இதில் நாம்என்று நான் மஞ்சள் கலரில் எழுதியிருப்பதே கடந்தகால எண்ணங்களின் பொட்டலம் தானே. ஆக கடந்தகாலமே அதிலிருந்து விடுபடுகிறது. கடந்தகாலமே தன்னிலிருந்து விடுபடுகிறது.

குழப்பமாயிருக்கிறதா? அது நல்லதுதான்.

அது சரி. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அடக்கு என்றெல்லாம் புத்தர் சொன்னார். துறவிகள் எல்லாம் சொன்னார்களே என்றால் ஆசை என்று வந்தவுடன் 'தேர்ந்து எடுக்கிறீர்கள்'. எனக்கு அது வேண்டும் என்று. அப்போது 'எது வேண்டாம்' என்ற எண்ணமும் வருகிறது.

இந்த இரட்டைத் தன்மை எண்ணங்களின் பிறவிக் குணம். இரட்டை இரட்டையாகவே வரும். தேர்ந்து எடுக்க ஆரம்பித்ததுமே மனம் (இதுவரை சேகரிக்கப்பட்ட எண்ணங்களின் பொட்டலம்) தேர்ந்து எடுக்கப்பட்ட தடத்தில் அதாவது ஆசையின் பாதையில் pattern ல் போக ஆரம்பிக்கிறது. அதனால் சொன்னார்கள் ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஆசை மட்டுமல்ல ஒரு முடிவு எடுத்து தீர்மானமாக நடை போடுவதும் ஆழ்மனம் (இறுகி கட்டி தட்டிப் போன எண்ணங்களால் ஆனது) தன்னிலிருந்து விடுபட தடையாய் இருக்கும். Will power என்பது ஒரு வகை ஆசையே!

ஆக இந்த விடுபடல் இல்லாமல் தியானம் என்பதோ ஜே.கே சொல்கிற ‘உண்மையை அறிதல்’ என்பதோ சாத்தியமேயில்லை.

சரி, முயற்சியின் மூலம் இதை அடையலாமா என்றால் முயற்சி என்றதும் எந்த திசையில் போவது என்ற கேள்வி வருகிறது. அப்போதே நீங்கள் தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போதே மனம் தன்னை விடுவித்துக் கொள்ள தடை ஏற்பட்டுவிடுகிறது.

மனதில் எல்லா அடுக்குகளும் ஒருவிதமான அமைதியில் இருக்க (அது புயலுக்குப் பின் சட்டென்று ஏற்படுகிற ஒரு வித அமைதி. இது உதாரணம்தான் ) அதுவே உண்மையை கண்டறிய ஏதுவான சூழ்நிலை (மனதில் ஏற்படுகிற சூழ்நிலை என்பதை வெளிச்சூழ்நிலை என்று பொருள் கொள்ள வேண்டாம்).

அது சரி மனம் என்பதே எண்ணங்களால் ஆன பொட்டலம் என்னும் போது எண்ணங்கள் விடுபட்டால் அப்போது மனம் என்ன ஆகும். அது இல்லாமலே ஆகும். ஏனெனில் அது எப்போதும் இருந்ததில்லை.(மேலே சொன்ன உதாரணத்தில் எறும்புப் பந்திலிருந்து எறும்புகள் விடுபடும்போது. அதன்பின் பந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. அதற்கு முன்பும் கிடையாது. எறும்புகள் மட்டுமே இருந்தன)

எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைக்குள். அவற்றின் போக்குவரத்தை நாம் மனம் என்று அழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார். ஆடைகள் இல்லாதது உடல் நிர்வாணம் எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். எண்ணங்கள் எப்படி இல்லாது போகும் எனில் ...கேள்வியை மாற்றிக் கேளுங்களேன்.

எண்ணங்கள் எப்படி இருக்கின்றன. என்று? குறிக்கோள் இருக்கும்போது

குறிக்கோள் எப்படி வருகிறது? ஆசை இருக்கும்போது.

ஆசையை ஒழிக்கலாமா? ஆக ஆசையை ஒழிப்பதை ஒரு குறிக்கோளாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள்...பிறகு எப்படி?

ஆசையை ஒழிக்க, சம்மணம் போட்டு உட்கார்ந்து, உடலை வளைத்து உடற்பயிற்சி செய்து, மூக்கை பிடித்து பயிற்சி செய்து..- .இதெல்லாம் எண்ணங்களை ‘தேர்ந்து எடுக்காமல்’ கவனிக்கும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லவே!

தேர்ந்து எடுக்காமல் எண்ணங்களை கவனித்தல் என்பது மனதை சுத்திகரித்தல்.மறுபடி ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்.



ஐயா! நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன். இது சம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் என்ன செய்ய...?

இதற்கான அவரின் பதிலையே இந்தக் கட்டுரையாக நான் இங்கு தந்துள்ளேன். இதை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

இன்னொருவர் வேலைக்கு போய் சம்பாதித்து கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று அவர்களை வளர்த்து ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து நிற்கிறார். எனக்கு எண்ணங்களால் தொல்லை என்கிறார். அவரும் இப்படியே இருக்கிறார். இவரும் இப்படியே இருக்கிறார். அவர் இருப்பது ஒரு வட்டம். இவர் இருப்பது இன்னொரு வட்டம்.

எண்ணங்கள் எண்ணங்களே! அவை நல்லவைகளாய் இருந்தாலும், கேவலமானவைகளாக இருந்தாலும் கொடூரமானவைகளாக இருந்தாலும், புனிதமானவைகளாக இருந்தாலும்,சொகுசு வாழ்க்கையில் உதித்தாலும்,கஷ்டப்படுகிற வாழ்க்கையில் உதித்தாலும்.

நீங்கள் எந்த வட்டத்தில் இருந்தால் என்ன?. வட்டத்தில் இருக்கிறீர்கள்.

உடனே அப்ப சமூகத்தில் நான் எப்படி வேணுமானாலும் இருக்கலாமா என்றால் இந்தக் கட்டுரை முதலில் இருந்து படிக்கப்பட வேண்டும் என்று பொருள்.

  
(ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Commentaries on Living-I என்ற நூலின் ஒரு கட்டுரையின் அடிப்படையில்...)

Sunday 12 January 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி 3






ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மேய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!


101. மதுவை அமுதம் என்று கருதும் அசுரர் போன்று அஞ்ஞானி சிற்றின்பத்தை பேரின்பம் எனக் கருதுகிறான்.

102. புலிக்கு அறியுந்தன்மை நுகர்ச்சியிளிருப்பது போன்று, ஞானியின் அறிவும் அகக்கண்ணில் இருக்கின்றது.

103. சக்தி திரண்டு பொருளாவது போன்று நிலையான சக்தி திரண்டு ஞானமாகிறது.

104. கருவுற்றிருப்பவர்களுக்கு அன்னத்துவேஷம் உண்டாவது போன்று ஞானக் கருவுற்றிருக்கும் ஞான
சாதகனுக்கு விஷய சுகங்களில் வெறுப்பு உண்டாகிறது.

105. கடம்புப்பால் குடல் அழுக்கை நீக்கும் கன்றுக்குட்டி போன்று ஞான சாதகன் ஞானப்பால் குடித்து அக மலங்களை நீக்கிய வண்ணம் இருப்பான்.

106. புறப்பார்வையிலிருக்கும் துரம், இடைவெளி, நேரம், காலம் முதலியவை அகப்பார்வையில் இருப்பதில்லை.

107. ஞானமும் பக்தியும் இரு கண்கள் போன்றவை. ஞான சாதகன் நிலைத்த பொறுமையுடையவனாகில் குறியின்கண் நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கருதலாம்.

108. உண்ணும் மருந்து பலிதமாவதற்குப் பத்தியம் அவசியமாயிருப்பது போன்று தவப் பயனுக்கு பிரமசாரியம் என்ற பத்தியம் அவசியமாகும்.

109. கடமை என்பது லௌகீகச் செயலாயிருந்தாலும் அதில் அன்பும், தியாகமும் கலக்கும் பொழுது ஞான சாதகமாக மாறுகின்றது.

110. தேனில் ஊறவிட்ட பழச்சுளைகள் கெட்டுவிடுவதில்லை. அதேபோன்று இறை சிந்தனையில் ஊறியிருக்கும் மனமும் புத்தியும் எக்காலமும் கெட்டுவிடுவதில்லை.

111. பிரபஞ்ச வாசனைகள் அற்றிருக்கும் மனம் ஆழமான மௌன சுகத்தை அனுபவிக்கின்றது. நீரைப் பிரித்துப் பாலை மாத்திரம் உண்ணும் பறவையை அன்னமென்பர். அன்னத்தைப் போன்று தன்னிலிருக்கும் அசத்தைப் பிரித்து சத்தை மட்டும் உண்ணுகின்றவனை ஞானி என்பர்.

112. ஆசையின் மத்தியில் அசைவற்றிருக்கும் இரகசியத்தை அறிந்தவனை ஆசைகள் தீண்டுவதில்லை.

113. சர்வ சக்திதரனும், சர்வ வியாபியுமாகிய இறைவனை எல்லா மதத்தவர்களும் ஏகோபித்து வழிபடுகின்றனர். அதே இறைவன் பெயரைச் சொல்லி எல்லா மதத்தினரும் ஒன்றோடொன்று மோதி வாழ்கின்றனர். என்ன மதியீனம்.

114. அன்பு என்பது ஒரு நல்ல மன விகாரம்.பக்தி என்பது மனத்தைக் கடந்த விளக்க முடியாத அற்புத ஆத்மசுகம்.

115. கோது, சுளை, வித்துக்குள்ளே இருக்கும் பீஜம் போன்றே முறையே மதம், பண்பாடு, தர்மம் அமைந்திருக்கின்றது.


116. பண்பாடு என்பது தர்ம நெறியிலிருந்து புடம் பண்ணியெடுத்த நல்லதோர் பழக்க வழக்கமாகும்.

117. வியாதிக்கு ஔஷதம் போன்று வாழ்க்கை என்ற வியாதிக்கு ஔஷதமாயிருப்பது தர்மம்.

118. சரீரம்,நித்தியம் என்றும் அநித்தியம் என்றும், வாதிட்டு வீணே காலம் கழிப்பவர்கள் சரீரத்தை உள்ளபடி பிரயோசனப்படுத்தத் தெரியாத வீணர்களேயாகும். சரீரத்தை மிஞ்சிப் போற்றுவதும் தூற்றுவதும் குற்றமாகும்.

119. விஷத்தை விஷ வித்தையால் இறக்குவது போன்று அஞ்ஞானம் என்ற விஷத்தை ஞானம் என்ற ஔஷதத்தால் சுகப்படுத்தலாம்.

120. திசை அறிகருவி திசையைக் காட்டுவது போன்று உண்மையான வாழ்க்கையின் திசையைக் காட்டும் கருவி மதம்.

121. யானைக்கு கரும்பு போன்று தர்மம் மனித வாழ்க்கைக்கு உவப்பான கரும்பு.

122. பால் கெட்டால் நஞ்சாக மாறுகின்றது. ஒழுக்கம் குறைந்த சமுதாயம் கெட்ட பாலுக்குச் சமன்.

123. மரத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் காயாவதில்லை. சில உதிர்ந்தே போய்விடுகின்றன. அதேபோன்று மனதில் உதயமாகும் எண்ணங்கள் முழுவதும் செயற்படுவதில்லை.

124. மலரிலிருந்து தேனூறுவதுபோன்று தியானத்தினின்று பெருஞ்சுகம் ஊறி வருகின்றது.

125. நீர் வற்றிய குட்டையில் துடித்துச் சாகும் மீன்கள் போன்று தர்மம் குன்றிய மனித சமுதாயம் பஞ்சமா பாதகங்களாக துடிதுடித்து மடியும்.

126. நீர் கலந்த பால் கெட்டுப்போனால் அது பாலின் குற்றமன்று. நீர் கலந்தவனின் குற்றமேயாகும். அனாசாரங்களினால் சமயம் கெட்டுவிட்டால் அது சமயத்தின் குற்றமன்று. அனாசாரங்களைப் புகுத்திய மனிதனின் குற்றமேயாகும்.

127. மனிதன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இருளும் ஒளியும் என்றென்றும் இருப்பது போன்று உலகம் இருக்கும் வரையில் தர்மமும் அதர்மமும் இருந்தே தீரும்.

128. உத்தமமான பக்தி பயத்தினால் உருவாகும் ஒரு மன விகாரமன்று. சத்திய தரிசனத்தில் அனுபூதி மாத்திரமாய் நிற்கும் விளக்கமுடியாத கோடானுகோடி இன்பங்களின் திரட்சியேயாகும்.

129. பிரார்த்தனை, வழிபாடு, பூஜை, ஜெபம், தவம் முதலியவற்றின் காரிய சித்திதான் பக்தி.

130. கருமம், யோகம், ஞானம் முதலிய மரங்களில் காய்த்துக் கனிந்த கனியே பக்தி.

131. புளிமாங்காய், நன்றாக முற்றிப் பழுத்தால் சுவை மிக்கதாய் மாறுவது போன்று விஷய வாசனையால் புளித்துக் கெட்டுப்போன வாழ்க்கை, பக்தி நெறியால் முற்றிப் பழுக்கும்போது நிலையான சுகத்தைக் கொடுக்கின்றது.

132. வெளிச்சம் ஒன்றினாலன்றி வேறெதனாலும் இருள் நீங்குவதில்லை. அதே போன்றே சுத்த ஞானத்தினாலன்றி வேறெதனாலும் வினைப் பயன் நீங்குவதில்லை.

133. தேன் கலந்த முக்கனி ரசம்போன்று தெய்வீகம் கலந்த கர்மம், யோகம்.ஞானம் என்ற முக்கனி பிழிந்தெடுத்த ரசமே பக்தி.

134. சந்துப்புழு, பயிர்களின் சந்து பொந்துகளில் குடியிருந்து பயிரை நாசஞ் செய்வதுபோன்று வஞ்சகக் குணம் இருதயத்தில் குடியிருந்து மனிதனை அடியோடு நாசஞ் செய்கிறது.

135. நீரோட்டத்திற்கெதிரே நீந்திப் பழகுவதால் சரீரம் வலுவடைவது போன்று வாழ்க்கையில் வருகின்ற கஷ்டங்களை எதிர்த்துப் போராடுவதனால் மனம் வலுவுடையதாகின்றது.

136. இனம் இனத்தை நாடுவது போன்று போலிகள் போலிகளை நாடுகின்றனர்.

137. நாய் போன்ற பிராணிகளுக்கு வெறி பிடித்தால் அடித்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித சமுதாயத்திற்கு வெறி பிடித்தால் என்ன செய்வது?

138. சமயமென்றால் கடைந்தெடுத்த வாழ்க்கைத் திட்டத்தின் பெட்டகமாகும்.

139. எந்த மதம் நிலையான தர்மத்தை உட்கொண்டிருக்கின்றதோ, அந்த மதம் என்றென்றும் உயிரோட்டம் உடையதாயிருக்கும்.

140. ஞானி ஞானோதயத்திற்குப் பின்னும் மக்களையும் மாநிலத்தையும் நன்றி உணர்வுடன் பார்க்கவேண்டும்.

141. பலாபழத்தின் சுவையும், குணமும் சுளையில் தங்கியிருப்பது போன்று மதத்தின் சாரம் மத தர்மத்தில் கலந்திருக்கின்றது.

142. மதத்தில் இடை புகுந்த அனாச்சாரங்களுக்காக மதத்தைப் புறக்கணிப்பது எலிக்குப் பயந்து இல்லத்தைச் சுடுவதற்கு ஒப்பானது.

143. ஜனநாயக ஆட்சியில் எதிர்கட்சிகள்,களை கொல்லி திராவகம் போன்றவை.ஆனால் அது அசிற்றுத் திராவகமாக மாறினால், பயிரையும் சேர்த்து அழித்து விடுவது போன்று ஆட்சியை அழித்துவிடும்.

144. மாமிசம் உண்பவனைப் பார்த்து பிணந்தின்னி என்றொருவன் சொல்வானாகில் விபரீத பயன் விளையும். எனவே உண்மையைச் சொல்லும் பொழுது பண்புடன் சொல்ல வேண்டும்.

145. நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளியின் உழைப்பில்தான் உண்மையான ஜீவ களை பொங்கி வழிகின்றது.

146. ஆத்மஞான சுகமும், உத்தமுமான பக்திச் சுவையும் ஒன்றேயாகும். பக்தியும், ஞானமும் ஆத்மாவின் இரு கண்களேயாகும்.

147. மனிதன் இறைவனில் இரண்டறக் கலந்திருக்குஞ் சுகமே பக்தி.

148. தேன் ஜாடியில் வீழ்ந்திருக்கும் தேனீக்கு எங்ஙனம் தேனைச் சுவைக்க முடிவதில்லையோ அதே போன்று பிரபஞ்ச வாசனையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குப் பக்தி என்ற தேனமுதைச் சுவைக்க முடிவதில்லை.

149. பொறியில் வீழ்ந்திருக்கும் பறவைக்கு உணவின் சுகம் இல்லாதது போன்று உலகப்பற்று என்ற பொறியில் வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்கு உண்மையான பக்தியின் சுவை தெரிவதில்லை.

150. நித்தியம், அநித்தியம், சிறுமை, பெருமை முதலியவற்றை சரிவர ஆராய்ந்து எது மெய் என்று அறியும் பொழுது பக்தியுணர்வின் ஊற்றுவாய் திறக்கப்படுகின்றது.


வஜனாம்ருதம் தொடர்ச்சி 2