Friday, 24 January 2014
தன்னை அறிந்தால் தவம்வே றில்லை
தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத்
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத்
தன்னை அறியச் சகலமு மில்லைத்
தன்னை அறிந்தவர் தாபத ராமே
பொன்னை யன்றி பொற்பணி யில்லை
என்னை யன்றி ஈசன்வே றில்லை
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத்
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே
ஆதியும் இல்லை அந்தமும் இல்லை
நீதியும் இல்லை நெறியும் இல்லை
சாதியையும் இல்லைச் சமயமும் இல்லை
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே
நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத்
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை
சொன்ன சுருதியின் துணிபிது வாமே
காலமு மில்லைக் கட்டு மில்லை
மூலமு மில்லை முடிபு மில்லை
ஞாலமு மில்லை நமனு மில்லைச்
சால அறிந்த தவத்தி னோர்க்கே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment