Wednesday 18 August 2010

Yogar Swamikal Natsinthanai

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத் 
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத் 
தன்னை அறியச் சகலமு மில்லைத் 
தன்னை அறிந்தவர் தாபத ராமே 

பொன்னை யன்றி பொற்பணி யில்லை 
என்னை யன்றி ஈசன்வே றில்லை 
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத் 
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே 

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை 
நீதியும் இல்லை நெறியும் இல்லை 
சாதியையும் இல்லைச்  சமயமும் இல்லை 
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே 

நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத் 
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை 
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை 
சொன்ன சுருதியின் துணிபிது வாமே 

காலமு மில்லைக் கட்டு மில்லை 
மூலமு மில்லை முடிபு மில்லை 
ஞாலமு மில்லை நமனு மில்லைச் 
சால அறிந்த தவத்தி னோர்க்கே.