Sunday 9 August 2009

அன்னை அபிராமி உபாசகி


நடமாடும் தெய்வமே நீ ஆடிவா தாயே

ஒடிவா தாயே ஒடிவா தாயே என்னருகே ஒடிவா தாயே


Saturday 8 August 2009

Beautiful

Man Existence

கீதாசாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.


கெங்காரப்பணம் - கெங்கைதாசன் - 02/08/09

Friday 7 August 2009

கீதாசாரம்

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

வாழ்வே இதுவென உணர்ந்தேன்.

வாழ்வே இதுவென உணர்ந்தேன்.



நலத்தை இழந்து பணத்தை சேர்த்து
நலத்தை மீட்க பணத்தை இழந்தேன்
இறப்பை மறந்து வாழ நினைத்து
இறக்கும் போது வாழ மறந்ததை உணர்ந்தேன்.

பள்ளிவாழ்க்கை முடித்து உயர்கல்விக்காக பறந்து
உயர்கல்விவாழ்வை முடித்து உழைப்புக்காக பறந்து
உழைக்கும்போது குழந்தை குடும்பமென்று பறந்து
உயிர்பறக்கும் நேரம் வாழ மறந்ததை உணர்ந்தேன்.

அன்னை தந்தை நிழலில் விளையாடித்திரிந்த காலம்
நண்பர் சுற்றமென்று உறவைத் தேடித்திரிந்த காலம்
இன்னும் வேணுமென்று பணத்தை ஓடிஉழைத்த காலம்
காலம்கடந்த ஞானம் நான் வாழ மறந்ததை உணர்ந்தேன்.

வாழ மறந்த உணர்வில் நான் வாட்டமுற்ற போது
வாழ்வு என்றால் என்ன என்ற தேடல் என்னுள் தோன்ற
தேடித் தேடித் தேர்ந்தேன் தேடல் இல்லா வாழ்வை
தேடலில்லை தேர்வுமில்லை வாழ்வே இதுவென உணர்ந்தேன்.

கெங்கார்ப்பணம் – கெங்கைதாசன். 01/08/09