Tuesday 29 October 2013

ஜயனி என் மனைவி



உதிரும் நினைவில் உதிரா நினைவாய் 
மலரும் நினைவில் மலராய் வருவாள் 
புதிதாய் புதிதாய் உறவுகள் வரினும் 
புரியாப் புதிராய் உறவுகள் பிரியும்.

அரிதாம் அரிதாம் மனிதம் அரிதாம் 
அதனினும் அரிதாம் அறிவை அறிதல்
அறிவால் உறவை அறிபவன் மனிதன்
அன்பால் உறவைப் புரிபவன் புனிதன்.

மனிதம் மறைந்து புனிதன் பிறந்தால்
இனிநம் உலகே இறைவன் வீடாம்
அறிவை மறந்து அன்பால் உணர்ந்தால்
தெளிவை அடைந்து தெய்வம் ஆவாய்.

தெய்வம் ஆன தேவதை அவளே
தெய்வம் ஆகின் தேவைகள் இல்லை
தெய்வம் அடிநான் சேரும் வரையென்
மலரும் நினைவில் மலராய் வருவாள்.

No comments: