Wednesday 29 November 2006

அறிவு


அறிவு

அறிவு ஊனுடல் உள்ளவரை
அறிவு வேண்டிடு மாந்தரெலாம்
அறிவு பேணிடப் பேணிவர
அறிவு பேணுதல் தானறிவார்.

தான் அறிவார் ஞானம்
தவம் அறிவார் ஞானம்
வான் அறிவார் ஞான(ம்)
வாழ்வுக் கோர்எல்லை இல்லை.

இல்லை இது வென்று
உண்மை அது கண்டார்
உள்ள துணர் வா(ரே)றே
உண்மை யுணர் வாழ்வே.

வாழ்வே வந்திங்கு வாழ்வோர்
வாழ்வே வந்திடும் வாழ்வாய்
வாழ்வே நொந்திடு வார்க்கு
வாழ்வே வெந்தனழ் ஆகும்.

ஆகும் போதகம் மகிழ்வார்
போகும் போதேம் பிடுவார்
சாகும் போதேங் கிடாரே
சாகா வரம் பெறுவார்.

பெறுவார் பேறெல்லாம் பிறர்வாழ
தருவார் வாழ்வென்றும் தார்போற்றும்
மருவா அறநெறி மார்க்கந்தான்
கருவா(ய்) உருவான நாள்முதலாய்.

நாள்முதலாய் இரவீறாய் நயந்திடுவார்
வான்முதலான் வழிநின்று நயம்பெறுவீர்
ஊன்முதலாய் உண்டுறங்கி உழலாது
தானறிவார் தனையறியக கடைத்தேறு.

கடைத்தேறு நாள்காண்ப தறிவு
கடைத்தேறார் உறவறுப்ப தறிவு
கடைத்தேறுவா ருடன்கூட லறிவு
கடைத்தேற அருள்கூற லறிவே அறிவு.

“அறிவு”
பத்திரிகை அபிமானியின் அறிவில் அறிவு பற்றிய ஆய்வு.






No comments: