Wednesday 29 November 2006

ARIVU - அறிவு

உங்களுடன் ஒரு நிமிடம்
நான்காவது சுற்று முதலாவது இதழ் உங்கள் கைகளில் தவழ்கிறது. இவ்வருட முதலாவது இதழ் வெளிவரத் தாமதமாகிய தால் இரு மாதத்துக்குரியதாக இதை வெளியிடுகின்றோம்.


பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி கூடிய பக்கங்களுடன் வெளிவருகிறது. அதனால் விலையிலும் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. அதைப் பொருட்படுத்தாது உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருவீர்களென நம்புகிறோம்.


உங்களுடன் ஓஷாவின் கருத்தினையும் பகிர்ந்து கொள்ளலாம் என விரும்புகின்றேன்.


"அகிம்சை என்பது பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தரக்கூடாது என்றுபோதித்திருக்கிறது. பிற உயிரினங்களைக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத் துகிறது. ஆனால் இவைகள் போதுமா? வாழ்வை உண்மையாக மதிக்க வேண்டுமானால், முதலில் உங்களின் உள்ளத்தை பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியை, உங்கள் அன்பை, உங்கள் அமைதியை, உங்கள் ஆனந்தத்தை, இப்படி உங்களிடம் என்ன இருக்கிறதோ, அவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்படி வாழ்வோடு இணைந்து நடந்து கொண்டால், கடவுள் உயிரோடு இ.ங்குவதை கண்கூடாக உணர்வீகள். பிறகு
மரத்தை அன்புடன் பார்ப்பதுகூட, ஒரு விருந்தாளிக்கு உணவு படைப்பதைவிட கடவுளுக்கு செலுத்தும் நன்றியாக, பூசையாக உணர்வீர்கள்."
எஸ்.பி.ராமச்சந்திரா,
ஆசிரியர் குழுவிற்காக

No comments: