Tuesday 30 December 2014

புத்தாண்டுப் புதுக்கவிதை



புத்தாண்டில் பூத்து வரும் புதுக்கவிதை
பத்தாண்டில் பழங் கருவாய் போயிருக்க
மற்றாண்டில் நிகழ்ந்தவைகள் நினைவுமாக
மலரட்டும் மற்றுமொரு மகத்தான புத்தாண்டு.

ஆண்டாண்டு தோறும் வரும் புத்தாண்டு
ஆங்காங்கே தோன்றி வரும் புதுக்கவிதை
வேண்டாங்க, மற்றவங்க மனம் நோகுமென
வேண்டாத வரிகள் நீக்க மனைவி இல்லை.

தாங்காத என் வலியைக் கவியாய் சொல்ல
தடையாக நின்றவளும் புவியில் இல்லை
நீங்காத நினைவலைகள் வந்து போக அவள்
தாங்காத சிலவரிகள் அழிந்து போகும்.

அவள் வடித்த முதல் கவிதை என் தமக்கைகாக
அவள் படித்த பல கவிதை என் படைப்பிற்காக
அவள் துடித்த துடிப்பெல்லாம் என் வலியை பார்த்து
அவள் முடித்த கதையை நான் தொடருகின்றேன்.

புத்தாண்டே நீ வர வேண்டும்; புத்துணர்வை
அள்ளித் தரவேண்டும்; சத்தியத்தின் பாதையிலே
தர்மங்கள் தழைக்க வேண்டும்; அன்போடு
அமைதி இந்த அகிலத்தை ஆள வேண்டும். "ஜோ"

No comments: