Thursday 25 December 2014

இதயத் தியானம்

ஞான மண்டலம் 


இதயத் தியானம் 


மனிதன் மங்களகரமான பல சங்கர்பங்களுடந்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான். காலக் கிராமத்தில் குடும்பம், உற்றார் உறவினர், பொரு ளாதாரம், சரீரம், தன் மானம் போன்றவை களிளிருந் தெழும் உபாதிகளுடைய உபத்திரவங்களால் மனதின் சம நிலை கெட்டு மனம் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கின்றது.
சிறுகச் சிறுகப் பெருகிவரும் மனத் தொல்லைகளுடன் சில காலங் கழிய, ஏற்கனவே மனதில் வைத்திருந்த சங்கற்பங்களுக்கு எதிர் மாறாக அன்றாட அனுபவங்களும் நிகழ்ந்து கொண்டுவர, மனமானது மென்மேலும் கலக்கமடைந்து புத்தியும் தடுமாறி சமுத்திர அலைகளில் அகப்பட்ட பந்து போல் தத்தளிக்கின்றது.
எண்பத்து நான்கு லட்சம் பிறவிகளில் அபூர்வமாகப் பெற்றெடுத்த இந்த மனித ஜென்மம் அஞ்ஞானத்தால் இப்படி ஒரு சோக நாடகமாய் முடிவடைகிறது.
ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் உலகியல் இன்பங்கள் எல்லாம் இன்று வரும், நாளை வரும் என்று எதிர் பார்த்துக் காலத்தை விரயமாக்காது எஞ்சிய காலத்தை யாவது ஞான தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து இருளில் இருந்து ஒளிக்கு வர முயற்சிக்க வேண்டும்.
ஜீவித கிலேசங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கு ஞான தர்மங்களை அன்றாட வாழ்க்கையுடன் இணைப் பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் உணர வேண்டும்.
பரிசுத்தமான இருதயத்தில் இருந்துதான் களங்கமற்ற பெரும் சுகத்தைத் தரும் தெய்வீக அமிர்தக் கசிவு ஊற்றெடுக்கின்றது. அந்த அமிர்தக் கசிவில் இருந்து ஒரு சிறு துளியேனும் ஒருவன் ஒருமுறை உட்கொள்ள முடியுமேயானால் அனுடைய வாழ்க்கைச் சேற்றில் முளைத்த வெண்டாமரை போல் அருள் மழை பொழிந்து மலரும்.
இந்தத் தெய்வீக மாற்றங்கள் வெறுமனே ஞான நூல்களை வாசிப்பதாலோ அருளுரை கேட்பதாலோ உண்டாவது இல்லை. அப்பியாச - அதொன் றினாலன்றி வேறொன்றினும் அது சித்திப்பதில்லை. எனவே உறுதியான வைராக்கியத்துடன் ஒரு ஆத்மீக உள்முகப் பயிற்சிக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்வீர்களாக.
முத்துச் சிப்பியில் விழும் ஒரு சிறு மழைத் துளி விலை மதிக்க முடியாத ஒரு முத்தை உருவாக்குவது போன்று ஒழுங்கான ஒரு சிறு ஆத்மீகப் பயிற்சி கூட ஒருவனைக் கடைத்தேற செய்யப் போதுமானது.
வைகறையில் உறக்கமுணர்ந்து சிறிதளவு குளிர்ந்த ஜலம் பருகிக் காலைக் கடன்களை முடித்துக் கொள்க. நேர வசதிக் கேற்றவாறு தேகப் பயிற்சிகள் செய்து முடிந்த பின்னர் நீராடுக. தேகசுகம் குறைந்தவர்கள் ஈரச் சீலையால் சரீர சுத்தி செய்தல் போதுமானது.
அதற்குப் பின் வழிபாட்டறையில் அல்லது தூய்மையான இடத்தில் விளக்கேற்றி நறுமணம் வீசும் மலர்களை வைத்துத் தக்க ஆசனத்தில் நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்கவும். மனம் கசிந்துருகும் வண்ணம் பக்திப் பாடல்கள் சிலவற்றைப் பாடிய பின்னர் குரு வணக்கமும் இறை வணக்கமும் செய்து முடிக்க வேண்டும்.
பின்னர் சுருக்கமான முறையில் ஆராதனைகளைச் செய்க. உடம்பை நேராக வைத்திருந்து மூக்கு நுனியைப் பார்த்தபடி சிறிது நேரம் இருந்த பின் நாசியை விரலால் பிடிக்காமல், இரு நாசித் துவாரங்களாலும் சுவாசத்தை நிதானமாக உள்ளிழுக்கவும். நெஞ்சில் வைத்திருக்கக் கூடிய அளவுக்கு வைத்திருந்து மெல்ல மெல்ல வெளி விடவும். சுவாசத்தை உள்ளுக்குள் இழுக்கும் பொழுதும், வெளி விடும் பொழுதும் சுவாசம் ஆடாமல் முறியாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாசத்தை ஏற்றி இறக்கும் பொழுது மனதை அதில் லயப் படுத்துவது அவசியம். இதனைச் செய்யக் கூடிய அளவுக்குச் செய்து (ஆரம்பத்தில் ஐந்திலிருந்து பதினைந்து தடவை) முடிக்கவும்.
பின்னர் நாசி வழியாக ஓடித் திரிந்து கொண்டிருக்கும் சுவாசத்தை ஊன்றிக் கவனித்தபடியே இருக்கவும். இது சரியாக அமைந்தால் கொஞ்ச நேரத்திற்குள் எண்ணங்கள அடங்கி மனம் சாந்த நிலையடையும்.
சாந்த நிலை அடைந்து வரும் மனதைச் சகுணத் தியானத்தில் நிறுத்திப் பழக வேண்டும். இறைவனுடைய ஏதாவதொரு திருவுருவத்தை நெற்றி, இருதயம், நாபி போன்ற தியான ஸ்தானங்களில் சங்கல்பித்து அதில் மனதை இடையறாது நிறுத்திப் பழகுவதுதான் சகுணத் தியானம் என்பது.
இதனை இருவேளை செய்க. தியானம் முடிந்த பின் எழுந்து தியான சித்திக்காக இறைவனுடைய தாளிணைகளை மனப் பூர்வமாக வணங்கி சாந்த சீலனாய் அன்றாடக் கடமைகளைச் செவ்வனே செய்து வருக. வீட்டில் இட வசதி இல்லாவிடில் ஆலயம் போன்ற இடங்களில் செய்வது நலம்.
பயிற்சிக் காலத்தில் தாது புஷ்டிக்கும் மன ஒருமைப் பாட்டிற்கும் உதவக் கூடிய பசும்பால், பசு நெய், தேன் போன்றவைகளை உட்கொள்ள வேண்டிய வசதியும் தேக நிலையும் இருப்பவர்கள் பகல் வேளையில் மாத்திரம் உட்கொள்ளவும், இரவு படுக்கைக்குப் போகும் முன் திரிபலாதி சூரணம் ஒரு களஞ்சியம் அளவில் எடுத்துச் சர்க்கரையில் குழைத்து உண்டு இளம் வெந்நீர் பருகிப் படுக்கவும். இது மல சுத்தியைச் செய்து வாத, பித்த, கப தோஷங்களைத் தீர்க்கும்.தேகத்தையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.
ஆசார சீலராயிருந்து ஒரு மண்டலம் தொடக்கம் மூன்று மண்டல காலம் வரையில் (ஒரு மண்டலம் நாற்பத்தொரு நாள்) தொடர்ந்து பழகி வரும் பொழுது உடலிலும் உணர்விலும் நல்ல மாற்றங்கள் தென்படும்.
சுபாவத்திலும் இம்மாற்றன்களைக் காணலாம். இடை யிடையே தெய்வீக தரிசனங்கள் கிடைக்கும். அவை மனம் ஒரு முகப் பட்டு வரும் பொழுது காணும் மானசீக தரிசனங் களைத் தவிர ஞான சித்திகளல்ல.
அநுபவங்களை அடக்கமாக வைத்திருக்கவும். இந்த சாதனையை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து வாழுகின்ற ஒருவருக்கு அருளொளி வீசும். ஒரு புதுக் கோணத்தில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் முடியும்.
அது மாத்திரமல்ல, ஜீவிதப் பிரச்சனைகளில் யதார்த்த காரணத்தைக் கண்டறிந்து, அதிலிருந்து விமோசனம் அடைவதற்குரிய மார்க்கங்களைத் தெளிந்து காண்பான். பட்ட மரத்தைத் துளிர்க்க வைக்கும் விருஷியூர் வேத காயகற்ப சிகிச்சை போன்று, இச்சிறு ஆத்மீகப் பயிற்சி தளர்ந்து போன வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைக்கும்.
பயிற்சியின் ஆழமும் சக்தியும் கூடிவரும் பொழுது அண்ட சராசரங்களுடைய சூத்திரதாரியாகிய இறை வனுடைய சூத்திரக் கயிற்றில் கோத்து ஆடிக் கொண்டிருக்கும் பாவைகள்தான் இப் பிரபஞ்ச வஸ்துக்களும், அதில் உட்பட்ட நாங்களும் என்ற பரமார்த்தீக போதம் வரும். இந்தப் பெரும் அநுபவ அறிவுதான் ஜன்மக் கிலேசங்களைத் தீர்க்கும் சம்பூரண ஞானம்.

No comments: