Friday 1 December 2006

திருகோணமலை நமச்சிவாயப்பதிகம்




கோண மாமலை கோயிலாய் உமை
பாகனே உனைப் பாடுவேன்
கான மாமழை காதிலோதிடும் கடலும்
சூழ் நற் பதியினாய்
ஆன மாமறை ஆகமங்களும் அருளும்
பேர் உறை பொருளினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

வான் உலாவரும் வானவர் தொழு
தேற்றும் சீர்திருக் கோணகா
தேன் ஊறுதமிழ் தேர்ந்த சொல்லினால்
தேனீயா யானுமா கினேன்
பூவெலாம் புகுந் தேகினேன் நின்
புதுமலர் பதம் புகும்வரை
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மான் உலாவரும் மாமலை தனில்
மாதுமை ஒரு பாகனாய்
தான் உலாவருங் கோலங் காட்டியே
தடுத்து நீஎனை ஆட்கொண்டாய்
யாது நானுரை செப்பினும் அது
உன்புகழ் சொல்ல ஒப்புமோ
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாலவன் அயன் இந்திரன் பணிந்
தேற்றி டுந்திரு கோணகா
காலனும் பணிந் தோடுவான் உன்
கடிதென வரு முனிவினால்
பாலனும் பணிந் தேற்றினான் திருப்
பாலமு துண்ட வாயினால்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாசிலா மதி மாலை சூடியே
சந்திர சேகர னானவா
ஞானமா ம்பிகை தன்னையே ஓர்
பாகமாய் புணர்ந் தேற்றவா
வானமா ம்பதி வாழுந் தேவர்கள்
வாழ்த்துரை செய் நாயகா
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

கோவிலும் குளக்கோட்டமும் பணி
செய்தவர் குலம் வாழவே
நாட்டமுமிக நண்ணினார் குலக்
கோட்டனும் உன் கோவிற்கே
மாற்றங் கள்பல வாகினும் என்றும்
மாறாத மீன்பொறி வாசகம்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

கடிந் துனைவரு காழ்ப்புணர் விழி
காட்சியும் போய் வருந்திட
பரிந்தவர் விழிப் பார்வையும் பெற
கண் தளைத்தவூர் கந்தளாய்
விரிந் துயர்வங்கக் கடலலை வந்து
வாருங் கரையுடை நாதனே
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

எண்திசை யினில் எல்லைக் காளிகள்
ஏற்றுந் சீர்திருக் கோணகா
ஏழிசை யினில் உன்னைப் பாடிட
ஏற்றம் பெற்றதோ ராவணன்
மண்னடி யினில் மாண்டி டாதுயிர்
மாவிரல் தனை மாற்றினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

தொழும் பினால்பல ஊர்கள் பேர்களும்
தோன்று மாம்நற் பதியினாய்
கருவில் ராவணன் கொண்ட கன்னிகை
பெயரில் வெண்நீ ரூற்றுடை
மருவி யோடிடும் மாவலி நதி
மாகடல் படு துறையினாய்
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.

மாதுமை யொரு பகனாய் விடை
ஏறியே வரு கோணேசா
நாளுமே உனைப் பாடுவார் மனம்
நாடியே வரு நாயகா
நானுனை நினைந் தேற்றிட அருள்
நல்கினாய் என் நாதனே
கோணேசா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே.


விரும்பி னாரவர் வினைகள் தீரவே
வரும்பதி கம்பத்தும் பாடிய
அருளும் ஜோதியாய் ஆனமதியினன்
பெருகு கங்கை பருகுனன்
பொருளும் போகமும் போற்றுவா ருயிர்
போகுங்கா லம் மருளுவார்
அருளுவா ரவரின்னல் கள்நீங்கிட
கோணமா மலை அமர்ந்தவா.

No comments: