skip to main |
skip to sidebar
அன்னை ஞானாம்பிகை 98வது ஜயந்தி
இன்று 06-12-2006 எமதன்னையின் 98வது பிறந்த தினம். அவர்கள் 28-10-1965 இல் எமைவிட்டுப் பிரிந்த போது அன்னாரின் நினைவாஞ்சலி மலருக்கு நான் எழுதிய கவிதைகளில் இரண்டு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலாது நிலைத்து நிற்கிறது. அவற்றை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அப்போது நான் பதினாறு வயதிலும் ஒரு பாலகன்.
ஈன்றதாய் எனக்கின்றில்லை நாளை எனைச்சான்றோன் எனக்கேட்க வருவளோ - இனியார்தமக்குதோன்றும் பேரவலம் துடைத்து நின்றுசான்றோன் எனச் சார்தல்.அருவமாய் உருவங் கொண்டுஅன்னையின் உயிருங் கொண்டாய்அக்கினி உருவங் கொண்டுஅன்னவள் உடலுங் கொண்டாய்தருமணி கடலு மானாய்தாயவள் நீறு கொண்டாய்பெருமுகில் உருவமாகப் பின்னவள்மறைந்து கொண்டாள்.
No comments:
Post a Comment