Saturday 17 December 2011

வைக்கோல் பட்டறை..

சின்ன சிறுவனிவன்..
கன்னி கவிதைகளை..
எண்ணி எழுதையிலே - சிலர்
... எள்ளி நகைப்பார்.

என்ன ஏது என்று
எண்ணியறியாமலே..
திண்ணை காலியானால்..
தள்ளியும் படுக்கார்- தானும் படுக்கார்

புத்தன் அவனுக்கோர்
போதி மரம் - என
எத்தன் இவனுக்கோ - என்ன
விதித்ததென ஏங்கியிருக்கையிலே!

இத்தை உலகத்தில்
போதி மரம் என்று
ஒத்தை மரம் தான்
எஞ்சியிருப்பதைப்போல்...

சத்தக் கவிதைக்கு..
போதியும்.. பேதியும்..
சித்தக் கலக்கத்தில்..
ஒத்து வருவதா????

ரெகு ராமின் பாடலுக்கு ஒரு பதில்

ஞானம் பிறக்க நல்லாசிகள்

கன்னிக் கவிதைகள்
எண்ணிக் கவிபாடும்
சின்னஞ் சிறுவர்களே!
நீங்கள்
பண்ணிப் படைக்கின்ற
பாட்டையும் கேட்டையும்
பார்த்துக் கிடப்பதற்கா?
நாங்கள்
எண்ணித் தவங்கிடந்தோம்?
கண்ணில் படுகின்ற
கருத்துக்கள் பிழை என்றால்
உங்கள்
திண்ணைக் கதைஎதர்க்கு? போதிமர
எண்ணிக்கைதான் எதற்கு?
மண்ணைக் கவ்வியும்
எங்கள்
மீசையில் மண் ஒட்டல்ல
கோஷங்கள் இங்கெதற்கு?
வார்த்தை ஜாலங்கள் ஏனுனக்கு?
தாங்கள்
பாடும் கவிதைகள்
கன்னியா? கிழவியா?
காலங் கணிக்கட்டுமே! உனக்கு
ஞானம் பிறக்கட்டுமே!

அருள்ஜோதிச்சந்திரன்

No comments: