Saturday 10 December 2011

மன வேதனை

தேவனைத் தொழுதேன் மனவேதனை அகல
நாதனைத் தொழுதேன் நரவேதனை அகல
ஆர்தனைத் தொழுதென் ஆரிடம் அழுதென்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

மனதிலோ கவலை உடலிலோ முதுமை
அறிவிலோ அவலம் ஆத்மாவின் சபலம்
தனதில்லா பொருளை தனதென்றலையும்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

உறவினைப் பகையென் றுணர்ந்த பின்னாலே
உறவினர் பகைவர்கள் உறவின் முன்னாலே
கரவில்லா அன்பை காண்பதற்கில்லை என்று
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

நெடுவழிப் பயணம் நெருங்கிய மரணம்
தருமொரு பாடம் சாதனையாக
கருவறை உறவும் கசந்ததைக் கண்டு
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

அருள்ஜோதிச்சந்திரன் 10 /12 /2012

No comments: