Saturday 10 July 2010

ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தாஜி


கலியுகத்தில் கடவுளின் கருணை பெற பஜனை வழி

ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தாஜி

நல்ல குருநாதன் என வழங்கித் திருக்கோணமலையில் சிவயோக சமாஜத்திலும் பன்குளக்குடிலிலும் நடராஜபுரத்திலும் ஐரோப்பியர் பலரை ஆட்கொண்டு எம்மவருக்குப் பத்திநெறி அறிவித்துப் பலநூல்கள் படிக்கவைத்துச் சித்தமலம் நீக்கிய சிவனேயென வாழ்ந்தவர் சுவாமிகள். தமிழரின் நுண்கலைகளை சிவயோகசமாஜத்தில் இருந்தவாறே உலகறியச் செய்தவர். அவர் கடைசியாக அருளிய உபதேசம்...

நாதல்ய யோகம் அல்லது நாம பஜனை என்பது பக்த ஜனங்களுடைய சித்த விருத்திகளை இருதய மருதமான ஆத்ம நாதத்தில் லயப்படுத்தி ஒடுக்குவதற்குரிய ஒரு லலிதமான ஆத்ம சாதனை.
எய்யும் அம்பு கூரியதானால் குறியில் ஆழமாய்த் தைப்பது போன்று கூர்மையான மனம் உடையவர்களால்தான் இறைவன் என்ற குறியைத் தவறாமல் அடைய முடியும்.
மனோலயம்...அதில்தான் மனம் ஒயுங்கிக் கூர்மை பெறுகின்றது. தீட்சா முறைகளும் கடினமான சாதனைகளும் இன்றி பாலர்களில் இருந்து வயோதிபர்கள் வரையும் பாடிப் பாடியவாறு மனம் இறைவன்பால் லயத்து ஒடுங்குவதற்கேற்ற எளிதான மார்க்கந்தான் பஜனை.

No comments: