Wednesday 16 April 2014

Facebook Post Jan & Feb'14

கவிதை

எனது மகனுக்கு பதினாறு வயதாகப் போகிறது. கடந்த பதினைந்து வருடங்களாக மனைவி இருந்தபோதும், இறந்தபின்னும் எந்தவிதமான இடையூறுமின்றி விம்பிள்டன் பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போய்வருகிறோம். சகோதரர்களின் பிள்ளைகளுக்கு பிள்ளை பிறந்தாலோ தீட்டு,துடக்கு, என்று வந்தாலோ மட்டுமே தடைப்படும்.
இன்று ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பித்து பாலஸ்தாபனம் பண்ணிய கோவிலில் யோக சுவாமிகளின் 'நற்சிந்தனை' புத்தகம் கிடைத்தது. அதிலொரு பாடல் 'சின்னத்தங்கம்' என்று முடிவுறும். அதனை எங்கள் சுவாமிஜி அவர்களின் வரிகளாக பாவித்து எங்கள் சகோதரியாரை அவர் அழைக்கும் 'சின்னத்தங்கச்சி' என்று மாற்றி எழுதிப் பார்த்தேன். எனது அக்காவின் அருளுரைகளும் இதுபோலவே அமைத்திருக்கும்.
அவருக்கு சமர்ப்பணமாக "சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம்" என்ற தலைப்பில் அமைத்துள்ளேன்.

"சின்னத்தங்கச்சி சிந்தையில் சிவநெறி விளக்கம் "

தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனளைந்தாய் - சின்னத்தங்கச்சி
வாட்டமெல்லாம் விட்டிடடி சின்னத்தங்கச்சி

ஆழித் துரும்பெனவே யன்குமிங்கு மாயலைந்து
பாரில் தவியாதே - சின்னத்தங்கச்சி
பார்த்து மகிழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

கங்குபகல் காணாத கருணைதனை வேண்டிக்கொண்டு
செங்கமல மடமாதே - சின்னத்தங்கச்சி
சீராக வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு
கேடரியாத் திருவடியை - சின்னத்தங்கச்சி
கிட்டநீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே
தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ் - சின்னத்தங்கச்சி
சீவன்சிவன் ஆச்சுதடி - சின்னத்தங்கச்சி

தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும்
அழுதழுது ஆண்டவனைச் - சின்னத்தங்கச்சி
ஆன்மலாபம் தேடிடடி - சின்னத்தங்கச்சி

முழுதுமுண்மை என்றுமுன்னாள் மோனகுரு சொன்னாரடி
பழுதொன்று மில்லையடி - சின்னத்தங்கச்சி
பவுத்திரமாய் வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய் - சின்னத்தங்கச்சி
மரணபய மில்லையடி - சின்னத்தங்கச்சி

சேண்பொழியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு
வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கச்சி
வேண்டிப் பணிந்திடுவாய் சின்னத்தங்கச்சி

மானாபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல்
தானான தன்னிலையில் - சின்னத்தங்கச்சி
தனியே யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

தானான தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை
மோன நிலைதனிலே - சின்னத்தங்கச்சி
மூழ்கி யிருந்திடடி - சின்னத்தங்கச்சி

புத்தியைநீ நாட்டாதே புன்நெறியைச் சூட்டாதே
வெற்றியுனக் குண்டாகுஞ் - சின்னத்தங்கச்சி
விருப்பும் வெறுப்பும்விடு - சின்னத்தங்கச்சி

எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து
பத்திசெய்து பார்த்திடுவாய் - சின்னத்தங்கச்சி
பழிபாவ மில்லையடி - சின்னத்தங்கச்சி

தத்துவப் பேயோடு தான்தழுவிக் கொள்ளாதே
சுத்தபரி பூரணத்தில் - சின்னத்தங்கச்சி
சுகித்துநீ வாழ்ந்திடடி - சின்னத்தங்கச்சி

வித்தகம்நீ பேசாதே வேறொன்றை நாடாதே
செத்தாரைப் போல்திரிவாய் - சின்னத்தங்கச்சி
தெய்வம்நீ கண்டிடடி - சின்னத்தங்கச்சி

மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ் - சின்னத்தங்கச்சி
தானொன்றாய்ப் போகுமடி - சின்னத்தங்கச்சி 
32


2014 புது வருட வாழ்வு

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151905481529296&id=678649295

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151906614599296&id=678649295&substory_index=0


பொங்கல்

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151689425989296&id=678649295&substory_index=0

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151931157189296&id=678649295&substory_index=0

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

https://www.facebook.com/permalink.php?story_fbid=10152006403054296&id=678649295&substory_index=0

இனிய நினைவுகள்


https://www.facebook.com/permalink.php?story_fbid=10151926929664296&id=678649295&substory_index=6

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151948614504296&id=678649295&substory_index=0

https://www.facebook.com/permalink.php?story_fbid=10151991268344296&id=678649295

https://www.facebook.com/permalink.php?story_fbid=10152001293659296&id=678649295

https://www.facebook.com/permalink.php?story_fbid=10152003586399296&id=678649295

https://www.facebook.com/permalink.php?story_fbid=10152010941214296&id=678649295&substory_index=0

https://www.facebook.com/?ut=43&wstart=1388563200&wend=1420099199&hash=-4152903300363800931&pagefilter=3

No comments: