Wednesday, 16 October 2013

அம்மா

அன்னை என்று உன்னை எந்தன்
அறிவில் கொண்ட நாள் முதல்
முன்னை பின்னை என்றில்லாமல்
மூவுலகத்திலும் உன்னையல்லதோர்
தெய்வமும் உண்டாங் கொள்ளோ.

இன்று (28/10/2013) எமதன்னையரின் 48வது சிரார்த்த தினம்.திதியல்ல. கந்த சஷ்டி விரத நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே அன்னாரின் திதி ஆகும். நானும் என் மைந்தனும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி மலர்தூவி நம் வணக்கங்களைத் தெரிவித்தோம். என் சகோதர - சகோதரியாருடன் தொடர்பு கொண்டு சொன்ன போது அவர்கள் முற்றாகவே இன்றைய தினத்தை மறந்து விட்டிருந்தது என் மனத்துக்குக் கொஞ்சம் நெருடலாயிருந்தது. அவசர உலகம், பரபரப்பான வாழ்க்கை என்று ஆயிரம் காரணங்கள் சொல்ல வந்தாலும் பெற்றோரின் இறந்த தினம் கூடமறந்து போகுமா?





என் அன்னையை நான் எனது பதினாறாவது வயதில் இழந்தேன்.
ஆறில் இழந்தால் அறியாத வயது. தேறியிருப்பேன்.
அறுபதில் இழந்தால் அனுபவித்த வயது. ஆறியிருப்பேன்.
பதினாறில் இழந்ததில் பழியானது எனது கல்வி மட்டுமல்ல; வாழ்வின் சுவையான பகுதியுந்தான்.
அன்று என் அன்னையின் நினைவாஞ்சலி மலரில் நான் எழுதிய வரிகளில் சில துளிகள்.

ஈன்றெடுத்த தாய் எனக்கின்றில்லை
நாளையெனைச் சான்றோனெனக்
கேட்க வருவளோ - இனி யார்தமக்கு
தோன்றும் பேரவலம் துடைத்து நின்று
சான்றோன் எனச் சார்தல்.

28.10.1965 இல் எழுதிய கவிதை. இனறு 48 வருடங்களின்
பின்னர் எதிரொலித்ததில் என்னுள்
நானே உடைந்து போகிறேன்.






இவர்களில் எண்மர் எனது தாயாரின் மைத்துனரும் மைத்துனியும் ஆவர்.
இவர்களில் சிலர் தங்களின் தாய் தந்தையரொடும் அப்பப்பா அப்பம்மாவோடும்
உள்ள 1909ஆம் ஆண்டுப் படம் விரைவில் போடவுள்ளேன்.






மூன்றெழுத்துக் கவிதை 'அம்மா'
முதலெழுத்து இல்லாட்டில் 'ம்மா'(பெரிய)
முடிவெழுத்து மட்டுமெனில் 'மா'
எல்லாமே பெரிதைத்தான் குறிக்கும்
அம்மா.

Wednesday, 9 October 2013

வஜனாம்ருதம்

அஸதோ மா ஸதகமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருத்யோர் மா அம்ருதம்கமய ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.


25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------வஜனாம்ருதம்

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

1. உனது வாழ்வில் நிரந்தரமான சுகத்துடன் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற விஷயத்தில் என்னனவும் சந்தேகப்படாதே. கருகிய கரி நெருப்புடன் சம்பந்தப் படும் பொழுது அதன் இயற்கையான கருமை மாறி ஒளிர்கின்றது. அதே போன்று உனது மனம் தெய்வீக ஒலியில் கலந்திருந்தால் ஜீவசுகம் நிறைந்த சம்பூரண மனிதனை உன்னில் காணலாம்.

 2. கறல் ஏறிய இரும்பைக் காந்தம் ஈர்க்காதது போன்று அழுக்கு நிறைந்த மனதைத் தெய்வீக ஒளி கவர்ந்தெடுப்பதில்ல.

3. உனது இதயத்தை தூய்மைப் படுத்துக. அப்பொழுது சிந்தனா சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதமான ரீதியில் பெருகும்.

4. நீ தெய்வத்தைப் பார்க்கவில்லையென்றாலும் தெய்வம் உன்னைப் பார்க்கிறது.

5. கண்கள் உலகத்தைப் பார்க்கும்  சக்தியை இழந்தாலும், தெய்வத்தைப் பார்க்கும் சக்தியை இழப்பதில்லை.

6.உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும்கூட பேராற்றலும் பேரறிவும் மறைந்திருக்கிறது. அதை உணரக்கூடிய அளவிற்கு இதயத்தைப் புனிதப்படுத்துக.

7.தார்மீக வழியில் தேடிய பணம் அவ்வழியில் செலவழித்தால் பாபங்கள் தேய்ந்துவிடும்.

8.உன் மனக்குற்றம் மற்றவர்களின் குற்றமாகத் தோற்றமளிக்கிறது.

9. அழுக்காறு நீங்கியபின் செய்யுந் தொண்டுதான் தொண்டு.

10. குறுகிய மனமுடையவனின் பக்தி நஞ்சு கலந்த அமிர்தம் போன்றது.

11.தன்னைத்தான் அளந்து பார்க்கத் தெரியாதவன் மற்றவர்களை அளந்து பார்ப்பது எங்ஙனம்?

12.உலோபியின் செல்வம் பாம்புப் புற்றிலிருக்குந் தேன் போன்றது.

13. நல்லதாயினும் அது நல்லோர்களிடத்திளிருந்து வரவேண்டும். 

14. கர்ம ரகசியம் தெரிதவனுக்கு  வாழ்க்கை விளையாட்டரங்கம் போன்றது. 

15. சேர்ந்து வாழ்ந்தாலும் நீரிற் கலந்த என்னேய்யைப்போல் வாழ்.

16. உன்னை உன்வசப்படுத்தினால், மற்றவர்கள் உன் வசப்படுவார்கள்.

17. உண்மை இருக்கும் இடத்தில் அழகும், இளமையும் பொழியும்.

18. அடிமைகள் வாழ்ந்தாலும், நலன் பெறுவதற்கு ஒன்றுமேயில்லை.

19. மரணபயம் இருக்கின்றவன் விடுதலையின் உயர்ந்த சுகத்தை அறிவதில்லை.

 20. அரிய சந்தர்ப்பங்கள் பலதும் உன் எதிரில் நிற்கின்றன. குழைத்து ஊட்டும்போது உண்ண மறுக்கும் குழந்தையைப்போல், சந்தர்ப்பத்தை உணர்ந்து செயற்படுத்தத் தெரியாதவர்கள்,துன்பத்திலிருந்து மீளுவதில்லை.

 21. காலத்தைப் பிரயோசனப்படுத்தத் தெரியாதவர்களுக்குக் காலமும், காலனும் ஒன்றே.

22. உபயோகமுறை தெரிந்தால் நஞ்சும் அமுதமாகும்.

23. உரிமை இல்லாத இடத்தில் உரித்துடன் பேசி விரோதிகளைத் தேடாதே.

24. மனிதா! உனது மெய்யன்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில், இவ்வுலகம் இல்லை. அதை உணர்ந்து அன்புடன் அரவணைக்கும் இறைவனிடம் அன்பு செலுத்தினால், வஞ்சனை இல்லாத பேரன்பில் முழ்கி வாழலாம்.

25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

Monday, 23 September 2013

Enru thaniyum intha suthanthira thaakam




என்று தணியும் இந்த சுதந்திர தாகம் 
என்று முடியும் எங்கள் அவலத்தின் ஓலம் 
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் 
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ 
பாரினில் இன்னல்கள் வேறினியார்க்கோ 
தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ 
தாயுந்தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ 

அன்றுநம் மண்ணில்நாம் ஆயிரம் மடிந்தோம் 
இன்றுநம் மண்ணில்நாம் போராடிட வாழ்ந்தோம் 
என்றுநம் கனவுகள் வென்றெடுப்போமோ
நம்மை நாம் ஆண்டிடும் நாளும்வாராதோ.







தமிழ் ஆழிக் கரையினிலே
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன்

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான்.



Ullathellaam ingonre


உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

Saturday, 17 December 2011

வைக்கோல் பட்டறை..

சின்ன சிறுவனிவன்..
கன்னி கவிதைகளை..
எண்ணி எழுதையிலே - சிலர்
... எள்ளி நகைப்பார்.

என்ன ஏது என்று
எண்ணியறியாமலே..
திண்ணை காலியானால்..
தள்ளியும் படுக்கார்- தானும் படுக்கார்

புத்தன் அவனுக்கோர்
போதி மரம் - என
எத்தன் இவனுக்கோ - என்ன
விதித்ததென ஏங்கியிருக்கையிலே!

இத்தை உலகத்தில்
போதி மரம் என்று
ஒத்தை மரம் தான்
எஞ்சியிருப்பதைப்போல்...

சத்தக் கவிதைக்கு..
போதியும்.. பேதியும்..
சித்தக் கலக்கத்தில்..
ஒத்து வருவதா????

ரெகு ராமின் பாடலுக்கு ஒரு பதில்

ஞானம் பிறக்க நல்லாசிகள்

கன்னிக் கவிதைகள்
எண்ணிக் கவிபாடும்
சின்னஞ் சிறுவர்களே!
நீங்கள்
பண்ணிப் படைக்கின்ற
பாட்டையும் கேட்டையும்
பார்த்துக் கிடப்பதற்கா?
நாங்கள்
எண்ணித் தவங்கிடந்தோம்?
கண்ணில் படுகின்ற
கருத்துக்கள் பிழை என்றால்
உங்கள்
திண்ணைக் கதைஎதர்க்கு? போதிமர
எண்ணிக்கைதான் எதற்கு?
மண்ணைக் கவ்வியும்
எங்கள்
மீசையில் மண் ஒட்டல்ல
கோஷங்கள் இங்கெதற்கு?
வார்த்தை ஜாலங்கள் ஏனுனக்கு?
தாங்கள்
பாடும் கவிதைகள்
கன்னியா? கிழவியா?
காலங் கணிக்கட்டுமே! உனக்கு
ஞானம் பிறக்கட்டுமே!

அருள்ஜோதிச்சந்திரன்

Friday, 16 December 2011

எங்கே எனது போதிமரம்?


இறை தேடல்...

இறையென்று உண்டென்று நானறிவேனே

இறை தேடும் வழிதன்னை யானறியேனே

வழிதேடும் திசை கூட யாமறியோமே - திரும்பிய

திசையெல்லாம் சுவையாக கண்டேனே


பொருள் தேடும் பூமியில் - நான்

பொருள் வென்ற போதிலே

ஒரு திசை தன்னை வென்றேனே - இனி

பொருள் போதும் என்றேனே




புகழ் தேடும் மனிதருள் - நான்

புகழ் தேடி தானேயோ - இப்

புவிமாறி போனேனோ - இன்னும்

புகழ் தேடல் தொடருதே..




அருள் நாடும் உலகத்துள்

திரும்பிய திசை எல்லாம் நான் வென்று

இறுதியில் இறுமாப்பையும் கொன்று

அருள் கூடி இருள் நீங்கிச்செல்வேனோ - இல்லை




சிறு போக ஆசையில் சுழன்று

பொருள் தேடி.. பின் புகழ் தேடி..

வரன் தேடி..பின் இல் அறம் தேடி - மீண்டும்

சிறை நாடி செக்கிழுபட்டிருப்பேனோ


ரெகுராம்
Posted by Sidharthan at 15:25 1 comments:
அருள்ஜோதிச்சந்திரன் said...
ஒரு பதில்

இரை தேடும் உலகில்
இறை தேடல் உருவில்
உரையாடும் உந்தன்
கவியாடல் கண்டேன்.

குறை கூறி இங்கு
கவி பாட வில்லை
நிறைவாக எதையும்
நீ கூற வில்லை.

இறை யறிந்தாய் இறை
தேடும் வழி யறியாய் தேடிய
திசை எல்லாம் சுவை யறிந்தாய்
சுவைத்தவனை அறிந்தாயா?

பொருள் தேடி ஒருதிசை
வென்றாய் நீ - வாழ்க்கையின்
பொருள் தேடி எத்திசை
சென்றாய் நீ என்றும்?

புகழ் தேடி இப்புலம்
மாறி வந்தாய் நீ
பகல் தேடி கதிரவன்
பயணித்தல் அறிவாயா?

அருள் நாடும் உலகென்று
வைத்தாயே ஒரு ஆப்பு
அதுவே உன் கவிதைக்கு
ஒரு பெரும் முஸ்தாப்பு.

சிறு போக ஆசையில்
எல்லாமே அடங்கிவிட
பெரும் போக ஆசைகளை
பேரிட்டு எழுதிவிடு.

போதி மரத்தடியில் வெறும்
பேதிக்கு ஒதுங்காதே - பாவம்
இன்னும் சில புத்தர்களும்
ஒதுங்க சுத்தமாய் இருக்கட்டும்.

அருள்ஜோதிச்சந்திரன்

16 December 2011 18:33
Post a Comment